Wednesday, March 18, 2009

சுயநலம்

இது முழுக்க முழுக்க நான் மனசு வருந்தி எழுதற போஸ்ட். என்னோட நண்பன பத்தின விஷயம். அவனுக்கு தமிழ் தெரியாது அதனால தமிழ் ல எழுதலாம்னு முடிவு பண்ணினேன். என்னத்த சொல்ல எப்பவுமே அவனையும் யோசிச்சு தான் நான் வாங்கறது எல்லாம். ஆனா நேத்து என்ன நடந்ததுனா, ராத்திரி சாப்பாட்டுக்கு அவனாகும் மட்டும் வீட்ல பண்ணிகிடடான். இத்தனைக்கும் அவனக்கு போன் பண்ணி கேட்டேன் என்ன பண்ண போறன்னு. என்ன வீட்டுக்கு வர சொன்னான். வந்ததும் ரெண்டு பெருமா சேர்ந்து ஹோட்டல் கு போலாம்னு சொன்னான். எந்த ஹோட்டல் நு கெட்ட எங்க ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போற வழில ஒரு ஹோட்டல் ஓட பெற சொன்னான். வீட்டுக்கு வந்துடு திரும்பு ஆபீஸ் வரதுல பாதி தூரம் வரதுக்கு, நீ கிளம்பி வாடான்னு சொன்ன சோம்பேரித்தனமா இருக்கு நான் வரல வீட்ல ரைஸ் விகைறேன்னு சொன்னான். எனக்கு அப்போவே உரைசிருகனும் அவனுக்கு மட்டும் தான் சொல்றான்னு ஆனா நான் என்னமோ எனக்கும் சேர்த்து தான் சொல்றான் போலனு நம்பிட்டேன். அதனால என்னோட ஆபீஸ் நண்பர்கள் கூப்பிட்ட பொது கூட நான் வரலைனு சொல்லிட்டேன். அப்பறம் திரும்ப போன் பண்ணி கேட்டா எனக்கு மட்டும் தான் வெச்சிருக்கேன் நீ வெளில சாப்பிட்டு வருவன்னு நினைசுன்னு சொல்றான்.

அதுக்கு முந்தின நாள் அவனாகும் சேர்த்து யோசிச்சு நீ கிளம்பி வாடான்னு சொன்னேன். அன்னிக்கு அவர்க்கு அவரோட வுட்பி ஓட அவர்க்கு சண்டை சோ சுப்போர்டுகு ஆள் தேவை அதனால ஒன்னும் சொல்லாம வந்தான். நேத்திக்கு சண்டை எல்லாம் சமாதனம் ஆகிடுச்சு சோ நம்மள மறந்துட்டார். எப்படி தான் இவ்ளோ சுயநலமா இருக்க முடியறதோ மக்களால. என்னால முடியல. அந்த மாதிரி இருக்க நான் ஆசை படவும் இல்ல. போதும் மத்தவங்களால நான் கஷ்ட படறது. என்னால மத்தவங்களும் கஷ்டப்பட்டு என்ன திட்ட வேண்டாம்.

No comments: